நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
'மெர்சல்' படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் செவ்வாய்க்கிழமை மதியம் திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கும் வரை இருந்தது. அவர்கள் சான்றிதழ் வழங்கிய பிறகே படத்திற்கான முன்பதிவு மும்முரமாக ஆரம்பமானது. படத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அளிக்கப்படவில்லை என விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அது அதிகாரப்பூர்வமான காரணம்.
ஆனால், படத்தைப் பார்த்த பலருக்கும் 'மெர்சல்' படத்திற்கு ஏன் தடைகள் என்பதற்கான காரணத்தை நேற்று புரிந்து கொண்டிருப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பற்றி வடிவேலு கிண்டலடித்துப் பேசுகிறார். அதோடு படத்தின் கிளைமாக்சில் '8 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்கும் போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் இலவச மருத்துவம் கொடுக்க முடியாதா,” என மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.
மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு காட்சிகளுக்கும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இப்போது இந்த இரண்டு காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். 'மெர்சல்' விவகாரம் படம் வெளிவந்த பிறகும் நீளும் என்றே தோன்றுகிறது.