ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'மெர்சல்' படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் செவ்வாய்க்கிழமை மதியம் திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கும் வரை இருந்தது. அவர்கள் சான்றிதழ் வழங்கிய பிறகே படத்திற்கான முன்பதிவு மும்முரமாக ஆரம்பமானது. படத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அளிக்கப்படவில்லை என விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அது அதிகாரப்பூர்வமான காரணம்.
ஆனால், படத்தைப் பார்த்த பலருக்கும் 'மெர்சல்' படத்திற்கு ஏன் தடைகள் என்பதற்கான காரணத்தை நேற்று புரிந்து கொண்டிருப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பற்றி வடிவேலு கிண்டலடித்துப் பேசுகிறார். அதோடு படத்தின் கிளைமாக்சில் '8 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்கும் போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் இலவச மருத்துவம் கொடுக்க முடியாதா,” என மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.
மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு காட்சிகளுக்கும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இப்போது இந்த இரண்டு காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். 'மெர்சல்' விவகாரம் படம் வெளிவந்த பிறகும் நீளும் என்றே தோன்றுகிறது.