'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான காட்சிக்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் தடைகள் பல கடந்து தீபாவளியான நேற்று ரிலீஸாகி இருக்கும் படம் மெர்சல். இப்படத்தில் மருத்துவம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுட்டி காட்டியிருக்கிறார் விஜய். அதோடு ஜிஎஸ்டி., டிஜிட்டல் இந்தியா போன்றவைகள் குறித்தும் படத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ. தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நில வேம்பு குடிநீர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.