இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான காட்சிக்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் தடைகள் பல கடந்து தீபாவளியான நேற்று ரிலீஸாகி இருக்கும் படம் மெர்சல். இப்படத்தில் மருத்துவம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுட்டி காட்டியிருக்கிறார் விஜய். அதோடு ஜிஎஸ்டி., டிஜிட்டல் இந்தியா போன்றவைகள் குறித்தும் படத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ. தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நில வேம்பு குடிநீர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.