தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவை குணப்படுத்த நேரடி மருந்துகள் இல்லை. அதேநேரம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறையும் ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம், மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசே டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்து உள்ளது.
நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற பொருளில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் கமல் மீது சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் 10 ஆண்டுகளாக நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வருவதாகவும், அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும், நிலவேம்பு கஷாயத்தை பற்றி கமல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த புகார் மனு சைபர் கிரைம் போலீஸ்க்கு மாற்றப்பட்டுள்ளது.