பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அரவாண் படத்திற்கு பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்ற ஆதி, சில படங்களில் வில்லனாக நடித்தவர், மீண்டும், யாகவராயினும் நாகாக்க படத்தில் தமிழுக்கு வந்தார். அந்தபடம் கைகொடுக்காத நிலையில், மரகத நாணயம் படத்தில் நடித்தார். அப்படம் ஹிட்டடித்தபோதும் பின்னர் தமிழில் ஆதிக்கு படங்கள் இல்லை.
அதனால், மீண்டும் தற்போது தெலுங்கிற்கு சென்றுள்ள அவர், வில்லன் மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு, அடுத்தபடியாக தமிழிலும் நெகட்டீவ் வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கும் ஆதி, சில டைரக்டர்களிடம் தான் தெலுங்கில் வில்லனாக நடித்துள்ள படங்களை முன்வைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்