'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து நேற்று தமிழில் வெளிவந்த 'மெர்சல்' படம் இன்று தெலுங்கில் வெளியாவதாக இருந்தது. 'அதிரிந்தி' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. ஆனால், கடைசி நேர சென்சார் பிரச்னையால் தமிழ்ப் படமே நேற்று குறிப்பிட்டபடி வெளிவருமோ வராதோ என்ற சூழ்நிலையே செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது. அதனால், தமிழ்ப் பட பிரச்சனையை மட்டும் அவசரமாக தீர்த்து முடித்தார்கள்.
தெலுங்கிலும் அதே சென்சார் பிரச்னை இருந்ததால் தமிழில் நீக்கப்பட்ட சில காட்சிகளை தெலுங்கில் நீக்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், படம் திட்டமிட்டபடி இன்று ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகவில்லை. அங்கு அடுத்த வாரம்தான் வெளியாகும் எனத் தெரிகிறது. இருந்தாலும் அது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே தற்போது 'மெர்சல்' வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் நேற்று கன்னட அமைப்பினர் பிரச்சனை செய்ததால் 'மெர்சல்' காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று வெளியாகாததால் முதல் சில நாட்களுக்கு படத்தின் மொத்த வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.