தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா, ஆந்திராவின் புகழ்பெற்ற சினிமா குடும்பமான அக்னிநேனி நாகேஸ்வராவ் குடும்பத்தின் மருமகளாகிவிட்டார். நாகசைதன்யா, சமந்தா திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் கோலாகலமாக நடந்தது. இந்த மணநாளில் மணமேடையில் சமந்தா கண்ணீர்விட்டு அழுதார். இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது தான் மணமேடையில் அழுதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அது வருமாறு:
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெற்ற பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. பணமும் சேர்ந்தது. சில தவறுகள் செய்து இருக்கிறேன். பிறகு அதை சரிசெய்து விட்டேன். மற்றவர்களுக்கு உதவி இருக்கிறேன். இவையெல்லாமே நாக சைதன்யாவுக்கு தெரியும். இப்படி என் வாழ்க்கையை முழுமையாக தெரிந்த ஒருவர் கணவராக அமைந்ததை நினைத்து தான் மணமேடையில் அழுதேன்.
திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று கணவர் குடும்பத்தில் யாரும் வற்புறுத்தவில்லை. தொடர்ந்து நடிக்கும்படி சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள். திருமணமான நடிகைகளாலும் நன்றாக நடித்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்று நிரூபிப்பேன். கவர்ச்சியாக இல்லாமல் கவுரவமான வேடங்களில் நடிப்பேன்.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.