ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா, ஆந்திராவின் புகழ்பெற்ற சினிமா குடும்பமான அக்னிநேனி நாகேஸ்வராவ் குடும்பத்தின் மருமகளாகிவிட்டார். நாகசைதன்யா, சமந்தா திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் கோலாகலமாக நடந்தது. இந்த மணநாளில் மணமேடையில் சமந்தா கண்ணீர்விட்டு அழுதார். இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது தான் மணமேடையில் அழுதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அது வருமாறு:
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெற்ற பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. பணமும் சேர்ந்தது. சில தவறுகள் செய்து இருக்கிறேன். பிறகு அதை சரிசெய்து விட்டேன். மற்றவர்களுக்கு உதவி இருக்கிறேன். இவையெல்லாமே நாக சைதன்யாவுக்கு தெரியும். இப்படி என் வாழ்க்கையை முழுமையாக தெரிந்த ஒருவர் கணவராக அமைந்ததை நினைத்து தான் மணமேடையில் அழுதேன்.
திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று கணவர் குடும்பத்தில் யாரும் வற்புறுத்தவில்லை. தொடர்ந்து நடிக்கும்படி சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள். திருமணமான நடிகைகளாலும் நன்றாக நடித்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்று நிரூபிப்பேன். கவர்ச்சியாக இல்லாமல் கவுரவமான வேடங்களில் நடிப்பேன்.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.