ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாஹசம் படத்திற்கு பிறகு பிரஷாந்த் நடிக்கும் படம் ஜானி. பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் ஸ்டார் மூவீஸ் சார்பில் தயாரிக்கிறார். பத்திரிக்கையாளர் வெற்றிச்செல்வன் இயக்குகிறார். பிரஷாந்துடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, கலைராணி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் நடித்திருப்பது பற்றி பிரஷாந்த் கூறியதாவது:
இதுவரை நான் நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படித்தான். பிரபு, இதற்கு முன் நடித்திராத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி இருக்கிறது. 17 ஷெட்டுகள் போட்டு படமாக்கப்பட்டது. இது ஆக்ஷ்ன் த்ரில்லர் படம். ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும்.
பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் தான் நடித்தேன். கேமராவுக்கு பின்னால் கலகலவென பேசிக் கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் இருப்பார். கேமராவுக்கு முன்னால் அப்படியே கேரக்டராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் தான் முன்னால் நிற்பார். அவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்பதற்காக அவரையே போட்டியாக நினைத்துக் கொண்டு நடித்தேன். நன்றாக நடித்தபோதெல்லாம் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவார். சஞ்சிதா ஷெட்டிக்கு இந்தப் படம் ஒரு திருப்பமாக இருக்கும். என்றார் பிரசாந்த்.