டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சாஹசம் படத்திற்கு பிறகு பிரஷாந்த் நடிக்கும் படம் ஜானி. பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் ஸ்டார் மூவீஸ் சார்பில் தயாரிக்கிறார். பத்திரிக்கையாளர் வெற்றிச்செல்வன் இயக்குகிறார். பிரஷாந்துடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, கலைராணி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் நடித்திருப்பது பற்றி பிரஷாந்த் கூறியதாவது:
இதுவரை நான் நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படித்தான். பிரபு, இதற்கு முன் நடித்திராத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி இருக்கிறது. 17 ஷெட்டுகள் போட்டு படமாக்கப்பட்டது. இது ஆக்ஷ்ன் த்ரில்லர் படம். ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும்.
பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் தான் நடித்தேன். கேமராவுக்கு பின்னால் கலகலவென பேசிக் கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் இருப்பார். கேமராவுக்கு முன்னால் அப்படியே கேரக்டராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் தான் முன்னால் நிற்பார். அவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்பதற்காக அவரையே போட்டியாக நினைத்துக் கொண்டு நடித்தேன். நன்றாக நடித்தபோதெல்லாம் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவார். சஞ்சிதா ஷெட்டிக்கு இந்தப் படம் ஒரு திருப்பமாக இருக்கும். என்றார் பிரசாந்த்.