டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறவர் பாவனா. கன்னடப் படங்களில் நடித்தபோது கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் காதலை மறுத்து வந்தவர் பின்னர் அதனை வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாழ்க்கையில் சில அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகும் பாவனாவை விட்டு விலகாமல் இருந்தார் நவீன். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பாவனாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்ததில் நவீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் பங்கு இருந்தது.
பாவனாவுக்கு ஆதரவாக இருக்கும் பொருட்டு அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் நவீன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவனாவுக்கும், நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் 26ந் தேதி திருமணத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாவனா. தனது திருமணத்துக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது என்றும், திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்றும், திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன் என்றும் பேசினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முடிவு செய்தபடி திருமணத்துக்கு இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் பாவனா 3 மாதங்கள் இருப்பதாக சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மீடியாக்கள் பாவனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது. "ஆம் திருமணத்தை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். படங்களின் ஷூட்டிங் காரணமாக திருமணம் தள்ளி போய் உள்ளதாக கூறப்படுகிறது.