'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'மெர்சல்' ரிலீஸாகுமா ஆகாதா என்கிற கவலையையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நிச்சயம் சொன்ன நேரத்தில் மெர்சல் ரிலீசாகும் என கடந்த நான்கு நாட்களாக மெர்சல் பட முன் கொண்டாட்டங்கள் மற்றும் பப்ளிசிட்டியில் கண்ணும் கருத்துமாக களமிறங்கி வருகின்றனர் கேரள விஜய் ரசிகர்கள். இப்படி சொல்வதற்காக நம்ம ஊர் விஜய் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் சரி, “எங்களுக்கு (கேரள விஜய் ரசிகர்களுக்கு) போட்டி அஜித் ரசிகர்கள் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தான்” என்பது போன்ற மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த அளவுக்கு மெர்சல் பப்ளிசிட்டியில் இறங்கி அடித்து வருகிறார்கள் கேரள விஜய் ரசிகர்கள். ஆனால் உண்மையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் (அக்மார்க் மலையாளிகள்) விஜய்யின் மெர்சல் பட ரிலீஸை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்பி என முக்கியமான நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கரவாகனங்களில் ரசிகர்கள் 'மெர்சல்' பேரணி நடத்தி ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
முன்பு ரஜினி நம் ஊரில் அடியெடுத்து வைத்த சமயத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எப்படி சிம்மாசனமிட்டு அமர்ந்தாரோ, அதேபோன்றதொரு நிகழ்வுதான் தற்போது கேரளாவில் உள்ளவர்கள் விஜய்க்கு கொடுத்து வருகிறார்கள். மெர்சல் படத்திற்கான அவர்களது கொண்டாட்டங்களை டுவிட்டர் பக்கங்களில் பார்த்தீர்கள் என்றால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நன்றாக புரியும்..