விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
குழந்தை நட்சத்திரமாக அறிமுமான சிம்பு, இப்போது இளம் ஹீரோ. சிம்பு நடிகர் மட்டுமல்லாது இசை அமைப்பாளர், பாடலாசிரியர் பாடகர். லூசுப்பெண்ணே.... முதல் பீப் சாங் வரையில் அவர் பாடிய எல்லாமே ஹிட் தான். சிம்பு இதுவரை 99 பாடல்களை பாடியுள்ளார். அவரது 100வது பாடல் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் இடம்பெறுகிறது.
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன்நாத் இயக்கி உள்ள படம். இந்தப் படத்தில் இஷான் தேவ் இசையில் விஜய் சங்கர் எழுதிய பாடலை சிம்பு பாடியுள்ளார். "என் ஆளோட செருப்ப காணோம். அதை தேடி தேடி அலையுறேன் நானும்..." என்று தொடங்கும் இந்தப் பாடல் சிம்புவின் 100 வது பாடல்.
இதுகுறித்து இயக்குனர் ஜெகன்நாத் கூறியதாவது: காதலி தொலைத்த செருப்பைத் தேடி காதலன் செல்வதும், அந்த தேடலில் அவனுக்கு கிடைக்கிற அனுபவங்களை சுவையாக சொல்வதும் தான் படம். இதில் காதலன், காதலி செருப்பை தேடிச் செல்லும் காட்சியில் வரும் மாண்டேஜ் பாடல் தான் "என் ஆளோட செருப்ப காணோம். அதை தேடி தேடி அலையுறேன் நானும்..." என்ற பாடல். இந்த பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரைக் கேட்டேன். பாடலை வாசித்து பார்த்தவர் "இதென்னங்க செருப்பு செருப்புன்னு கூவி விற்கிற மாதிரி இருக்கு" என்று கூறி பாட மறுத்து விட்டார். அதன் பிறகு மெட்டுடன் டம்பியாக பாடி அவருக்கு காண்பித்தவுடன் அவருக்கு பிடித்து விட்டது உடனே பாடிக் கொடுத்தார். பாடலில் செருப்பு என்கிற வார்தை 96 முறை வரும் என்றார் ஜெகன்நாத்.
இதுகுறித்து இயக்குனர் சிம்பு கூறியதாவது : பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம், என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்களை நான் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களை பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை. இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எப்போதுமே கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவன், எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருப்பது இசையில் பரந்த மற்றும் பெரிய புரிதலை கொடுத்திருக்கிறது. எந்த அவதாரத்தில் நான் இருந்தாலும் என்னை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. என்னை பொறுத்த வரையில் 100 என்பது சாதாரண ஒரு நம்பர் தான், ஆனாலும் இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று. எனக்கான தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன் என்கிறார் சிம்பு.