மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து சினிமா நடிகர் ஆனவர் டாக்டர் சீனிவாசன். சென்னையில் பல இடங்களில் அக்குபன்ஞர் மருத்துவமனை நடத்தி வரும் இவர் மீது ஏற்கெனவே நிறைய பண மோசடி புகார்கள் வந்தது. பல வழக்குகளும் நடந்து வருகின்றன. சிறைக்கு செல்வதும், ஜாமினில் விடுதலையாகி சினிமாவில் நடிப்பதுமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த தயாநிதி என்ற இளைஞர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்தேன். அப்போது நடிகர் சீனிவாசனுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்தார். அதை நம்பி அவரிடம், நான் ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் கொடுத்தேன். ஆனால், அவர் இதுவரை எனக்கு சினிமா வாய்ப்பு பெற்று தரவில்லை. மேலும் அவரை நேரில் பார்க்க சென்றால் பார்க்க முடிவதில்லை. என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் மோசடி செய்து விட்டார். எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து, சீனிவாசனிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.