இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
1991ல் மலையாளத்தில் வெளியாகி சுமார் 417 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம் 'காட்பாதர்'.. முகேஷ், கனகா, திலகன் மற்றும் பலர் நடித்திருந்த இந்தப்படத்தை பிரபல இரட்டை இயக்குனர்களான சித்திக்-லால் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள்..
இதில் முகேஷ் தான் ஹீரோ என்றாலும் இந்தப்படத்தில் காட்பாதர் கேரக்டரில் பெரியவராக நடித்திருந்த மறைந்த என்.என்.பிள்ளை என்பவர் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தனது சிறப்பான நடிப்பால் கவர்ந்தார்.. இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் மட்டுமல்ல, சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவரும் கூட..
இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகிறது.. சில நாட்களுக்கு முன்பு 'கம்மட்டிப்பாடம்' இயக்குனர் ராஜீவ் ரவி நிவின்பாலியை வைத்து புதிய படம் இயக்குவதாக ஒரு அறிவிப்பு வெளியானதே.. அது இந்தப்படம் தான். இதில் என்.என்.பிள்ளை கேரக்டரில் தான் நிவின்பாலி நடிக்கவுள்ளார்.
இந்த என்.என்.பிள்ளையின் மகன் தான் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான விஜயராகவன்.. இவர் தமிழில் அரங்கேற்ற வேளை மற்றும் விஜய்யின் 'பைரவா' படங்களில் நடித்துள்ளார். தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவதிலும், அதில் நிவின்பாலி நடிப்பதிலும் தான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக கூறியுள்ளார் விஜயராகவன்.