ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக பைரஸி இணையதளங்களினால் சினிமா உலகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. புதிய படங்கள் திரைக்கு வரும் அன்றே இணையதளங்களிலும் வெளியாகி விடுவதால், தியேட்டர் வசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த மாதிரியான பைரஸி இணையதளங்கள் திரையுலகினருக்கு சவால் விட்டபடி படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், தமிழ்கன் என்ற இணையதளத்தின் அட்மினை கைது செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அதன்பிறகு வெளியான துப்பறிவாளன் படம் அந்த இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் திரைக்கு வருவதின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பைரஸி இணையதளங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், மெர்சல் படத்தை ரிலீஸ் அன்றே வெளியிடுவதாக முன்பு அறிவித்திருந்தோம். ஆனால், இப்போது ரிலீசாகி மூன்று நாட்களுக்குபிறகு வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு தைரியமாக வெளியிடும் இதுபோன்ற இணையதளங்களை திரையுலகினர் தடுத்து நிறுத்துவது எப்போது?