ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரெமோ படத்தை போன்று, தொடர் விடுமுறை நாட்களை குறிவைத்து சிவாகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்தையும் ஆயுதபூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்.
அனிருத் 2 பாடல்களைத்தராதது ஒருபக்கம், இரண்டு படங்களுக்கான நீளத்துடன் எடிட்டிங் வெர்ஷன் இருப்பது இன்னொரு பக்கம் என வேலைக்காரன் பட வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையவில்லை. எனவே இந்தப்படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், யாருக்கும் பேட்டியளிக்கவில்லை. செய்தியாளர்கள் கேள்வி கேட்கவும் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.
சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, சமீபகாலமாக பல நடிகர்கள் பிரஸ்மீட் என்ற பெயரில் கலந்து கொண்டுவிட்டு அவர்கள் என்ன சொல்ல வருகிறார்களோ அதை மட்டும் பேசிவிட்டு செல்கின்றனர். பத்திரிகையாளர்கள் யாருக்கும் பேட்டியோ, கேள்வியோ கேட்க அனுமதிப்பதில்லை. தங்களை நெருங்காத அளவுக்கு தங்களை சுற்றி வட்டம் போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
அதேசமயம், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் செய்தியாளர்களுடன் மிக நட்புடன் பழகி வருகின்றனர்.