ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட கொடி வீரன் படம் வெளியாகவில்லை. மெர்சல் படத்தின் நிலவரமும் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது. இதை பயன்படுத்தி சரத்குமார் நடிக்கும் 'சென்னையில் ஒரு நாள்-2' படத்தை தீபாவளி ரிலீசாக வெளியிட உள்ளனர்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்டு பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படம் இது. 'சென்னையில் ஒரு நாள்-2' படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருப்பதை படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், வைபவ் நடித்துள்ள 'மேயாத மான்' படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் நிலையில் இப்போது 'சென்னையில் ஒரு நாள்-2' படமும் வெளியாகவிருக்கிறது.
அறிமுக இயக்குனர் ஜே.பி.ஆர்.இயக்கியுள்ள 'சென்னையில் ஒரு நாள்-2' படத்தில் சரத்குமாருடன் அஞ்சனா பிரேம், சுஹாசினி, நெப்போலியன் முனிஸ்காந்த் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.
மெர்சல் வெளிவராமல்போனால் இந்த தீபாவளிக்கு மேலும் சில படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.