டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் நாளை மறுநாள் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான தியேட்டர்களில் படத்திற்கான முன்பதிவு இன்னும் முழுவீச்சில் தொடங்கவில்லை.
ஒரு சில சிறிய தியேட்டர்களில் மட்டும் முன்பதிவு நடந்து வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பெரிய தியேட்டர்களில் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.
விலங்குகள் நலவாரியம் இன்னும் படத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்காததால்தான் இந்தத் தாமதம் எனத் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். இன்று காலை விலங்குகள் நலவாரியத்தில் 'மெர்சல்' படத்திற்கான சிறப்புக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதன் பிறகே 'மெர்சல்' படத்தின் வெளியீடு குறித்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
விஜய் ரசிகர்கள் இன்னும் முன்பதிவு ஆரம்பிக்காதததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த தாமதத்தால் படத்தின் முதல் சில நாட்களின் வசூல் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. விலங்குகள் நல வாரியம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை முன்னரே சரி செய்திருக்கலாம், ஏன் , இப்படி கடைசி நேர சிக்கலை உருவாக்கியுள்ளார்கள் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்து சுமூகமான ரிலீஸ் 'மெர்சல்' படத்திற்கு நடக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.