டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களின் பாணியில் சசிகுமார் தற்போது நடித்து வரும் படம் கொடிவீரன். முத்தையா இயக்குகிறார். மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, விதார்த், பால சரவணன் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படம் பற்றி சசிகுமார் கூறியதாவது:
அண்ணன் தங்கை பாசக் கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. குட்டிப்புலி படத்தில் நடிக்கும்போது கிராமத்து பின்னணியில் அழகான ஒரு அண்ணன், தங்கை பாசக் கதை ஒன்று தயார் செய்யுங்கள் என்ற கூறியிருந்தேன். எனக்காக அவர் உருவாக்கியதுதான் கொடிவீரன் கதை. எனது தங்கையாக சனுஜா நடிக்கிறார். காதலியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ஒரு முக்கியமான கேரக்டரில் பூர்ணா நடிக்கிறார். இரண்டு சீனுக்காக மொட்டை போட்டு நடித்துள்ளார் பூர்ணா. அவரது கேரக்டர் பட வெளியீட்டுக்கு பிறகு பேசப்படும்.
நான் கோவில் திருவிழாவில் குறி சொல்கிற கொடிவீரனாக நடித்திருக்கிறேன். தங்கை பேச்சுக்கு மறுபேச்ச பேசாத அண்ணன். படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. சூழ்நிலையும், கதாபாத்திரங்கள் எடுக்கும் சில தவறான முடிவுகளும்தான் வில்லன். சிவாஜி சாரின் பாசமலர் மாதிரி இதுவும் அண்ணன் தங்கை பாசத்தில் உருவ வைக்கும் நவீன பாசமலர். என்கிறார் சசிகுமார்.