அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
ஆம்ஸி பிலிம்ஸ் சார்பில் ஆர்ம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிக்கும் படம் உயில் ஒன்று. இந்தப் பட்தை தீபன் இயக்குகிறார். கணேஷ் இசை அமைக்கிறார், பிரெட் ஆலன் மற்றும் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்கள். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணத்தில் உள்ள மர்மங்களை சொல்லும் படம் என்கிறார் இயக்குனர் தீபன். அவர் மேலும் கூறியதாவது:
இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்றுவரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்று ஒரு சாரரும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் . நேதாஜியின் மரணம் பற்றி பல நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஆராய்ந்து அவர் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை சில இளைஞர்கள் துப்பறிவது மாதிரியான கதை. நேதாஜியின் வரலாற்று கதை அல்ல. அவரது மரணம் குறித்த விடையைத் தேடிச் செல்லும் கதை.
இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி "விர்ச்சுவல் ரியாலிட்டி" தொழில் நுட்பத்தில் படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம். 60 சதவிகிதம் புது டெக்னாலஜிகளால் பார்ப்பவர்கள் வியக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. என்றார் தீபன்.