‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ்க்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ரசூல்பூக்குட்டி. தமிழில், எந்திரன், நண்பன், கோச்சடையான், யான், ரெமோ ஆகிய படங்களுக்கு சவுண்ட் எபெக்ட் கொடுத்திருப்பவர் தற்போது 2.ஓ, சங்கமித்ரா படங்களுக்கும் கமிட்டாகியிருக்கிறார். இவர் தற்போது பிரசாத் பிரபாகர் என்பவர் இயக்கும் கதை சொல்லட்டுமா -என்ற படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. மற்ற மொழிகளில் தி சவுண்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகிறது.
மேலும், திருச்சூர் புரம் திருவிழாவில் பல்வேறு ஒலிகளை பதிவு செய்வதற்காக திருச்சூர், கேரளா செல்லும் ஒலி வடிவமைப்பாளர் கதையில் இந்த படம் தயாராகிறது. இதில் முக்கிய வேடமான சவுண்ட் டிசைனர் வேடத்தில் நடிக்கிறார் ரசூல் பூக்குட்டி. கண் பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக இந்த படம் தயாராகிறது. குறிப்பாக, அவர்கள் இந்த படத்தை முழுமையாக அனுபவிக்கும் வகையில், சவுண்டிலேயே கதை சொல்லப் போகிறார்களாம்.