தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. முன்னதாக, கேளிக்கை வரி சம்பந்தமான பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்ததால் தீபாவளிக்கு மெர்சல் திரைக்கு வருமா? என்கிற குழப்பம் நீடித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்றே சோர்வுடன காணப்பட்டனர். ஆனால், தற்போது பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மெர்சல் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி விட்டது.
இதனால் முந்தைய விஜய் படங்களை விட இந்த மெர்சல் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கத் தொடங்கி விட்டனர் விஜய் ரசிகர்கள். அதன்காரணமாக தமிழகமெங்கிலுமுள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் கட்அவுட், பேனர்கள் ரெடி பண்ணும் வேலைகளில் தீவிரமடைந்துள்ளனர். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள், மிகப்பெரிய அளவில் மெர்சல் படத்தை வரவேற்று போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில் சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது என்றெல்லாம் அதிரடி வாசகங்களை இணைத்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளனர்.