டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காலா படத்தில் நடிப்பதற்கு முன்பாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்ட ரஜினி, அப்போதே தான், அரசியலுக்கு வரப்போவதாக ஓரளவு அறிவித்தார். அதோடு, என்னை வாழ வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் சமூக நோக்க முள்ளவர்கள் மட்டும் என்னிடம் இருக்கலாம். இவரிடம் வந்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடுபவர்கள் இப்போதே இங்கிருந்து போய்விடலாம் என்றும், போர் வரும் பார்த்து கொள்வோம், அதற்கு தயாராகுங்கள் என்று ரஜினி பேசினார்.
அதன்பிறகு டுவிட்டரில் கருத்துக்கள் வெளியிட்டு சர்ச்சைகளை சந்தித்த கமலை, முதுகெலும்பு இல்லாதவர், அரசியலுக்கு வந்து இப்படியெல்லாம் பேசட்டும் என்று சில அரசியல் கட்சியினர் சொல்ல, இப்போது கமலும் அரசியல் கட்சி தொடங்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இதனால் சினிமாவில் போட்டியாளர்களாக திகழ்ந்த ரஜினி, கமல் ஆகிய இருவரும் அடுத்தபடியாக அரசியலிலும் போட்டியாளர்களாக மாறும் சூழல் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில், தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி தனது புதிய கட்சி சம்பந்தமான அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த நேரத்தில், தனிக்கட்சி தொடங்கலாமா? இல்லை வேறு கட்சியில் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடலாமா? என்பது குறித்து ஆலோசித்து வரும் ரஜினி, தமிழக மக்களின் மனநிலையை அறியும் சர்வே ஒன்றை தனது ரசிகர்கள் மூலம் எடுத்து வருகிறாராம். அதுபற்றிய முழுவிவரங்களையும் தெரிந்த பின்னரே தனிக்கட்சியா? இல்லை கூட்டணியா? என்பது குறித்து முடிவெடுக்கிறாராம் ரஜினி.