ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அவர், தீபாவளின்னாலே பட்டாசு தான் முதல்ல வரும். அதனால் உங்க பிள்ளைங்களை பாதுகாப்போடு பட்டாசு வெடிக்க சொல்லுங்க. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லுங்க என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, நான் பத்திரிகைகளை சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது. ஆனால் இனிமேல் வருடத்திற்கு இரண்டு மூன்று தடவையாவது சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் அப்படி ஆகிறது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்களை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு படங்களை தேர்வு செய்வேன் என்றார் சிவகார்த்திகேயன்.