'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காமெடி நடிகரும், சின்னத்திரை தொகுப்பாளருமான தாடி பாலாஜி, நித்யா என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். தன்னை ஜாதி பெயர் சொல்லி திட்டி அடித்து உதைத்ததாக பாலாஜி மீது நித்யாவும், என் மனைவியின் நடத்தை சரியில்லை, தனது ஆண் நண்பர்கருடன் இணைந்து எனது பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறார் என்று பாலாஜியும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நித்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தாடி பாலாஜி ஒரு நடிகர் என்பதால் அரசியல் செல்வாக்கு, போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு தற்கொலை முடிவு அடிக்கடி ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
பாலாஜி திருமணமான சிறிது காலத்திலேயே என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டார். அவரது முதல் மனைவியிடமும் இதேபோன்று நடந்ததால் தான் அவர் விவாகரத்து பெற்றுள்ளார். பாலாஜியை மனநல மருத்துவரிடம் காண்பித்து 2 முறை கவுன்சிலிங் அழைத்து சென்றேன். அதன்பின்னர் அவர் மருத்துவரிடம் வர மறுத்துவிட்டார்.
என்னை பற்றிய வதந்திகள் பரவுவதால் மிகுந்த மனவேதனையாக உள்ளது. தினந்தோறும் புதிது புதிதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இது என்னோடு நின்றுவிடாமல் என் குழந்தையின் வாழ்க்கையையும் பாதிக்கும். போலீசாரிடம் முறையிட்டாலும் பலன் இல்லை. பாலாஜி ஒரு நடிகர் என்பதால் அவருக்கு அரசியல் கட்சியினர், போலீசார் உதவி செய்து வருகின்றனர். பாலாஜி தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் சேர்ந்து வாழ வேண்டும் கட்டாயப்படுத்துகிறாரே தவிர நானோ, எனது மகளோ அவருக்கு முக்கியம் அல்ல.
நான் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஒன்றும் செய்யாத என்னை போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். நான் வீடியோ வெளியிடக்கூடாது, பத்திரிகையாளர்களை சந்திக்கக் கூடாது என என்னை மிரட்டுகிறார்கள். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி தெரியவில்லை. அடிக்கடி தற்கொலை எண்ணமும் வருகிறது. இதனால் நான் பயத்துடனேயே வாழ்ந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.