Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தி மிரட்டல்: தாடி பாலாஜி மனைவி மீண்டும் புகார்

14 அக், 2017 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Balaji-threatening-me-says-Wife-Nithya

காமெடி நடிகரும், சின்னத்திரை தொகுப்பாளருமான தாடி பாலாஜி, நித்யா என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். தன்னை ஜாதி பெயர் சொல்லி திட்டி அடித்து உதைத்ததாக பாலாஜி மீது நித்யாவும், என் மனைவியின் நடத்தை சரியில்லை, தனது ஆண் நண்பர்கருடன் இணைந்து எனது பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறார் என்று பாலாஜியும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நித்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தாடி பாலாஜி ஒரு நடிகர் என்பதால் அரசியல் செல்வாக்கு, போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு தற்கொலை முடிவு அடிக்கடி ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

பாலாஜி திருமணமான சிறிது காலத்திலேயே என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டார். அவரது முதல் மனைவியிடமும் இதேபோன்று நடந்ததால் தான் அவர் விவாகரத்து பெற்றுள்ளார். பாலாஜியை மனநல மருத்துவரிடம் காண்பித்து 2 முறை கவுன்சிலிங் அழைத்து சென்றேன். அதன்பின்னர் அவர் மருத்துவரிடம் வர மறுத்துவிட்டார்.

என்னை பற்றிய வதந்திகள் பரவுவதால் மிகுந்த மனவேதனையாக உள்ளது. தினந்தோறும் புதிது புதிதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இது என்னோடு நின்றுவிடாமல் என் குழந்தையின் வாழ்க்கையையும் பாதிக்கும். போலீசாரிடம் முறையிட்டாலும் பலன் இல்லை. பாலாஜி ஒரு நடிகர் என்பதால் அவருக்கு அரசியல் கட்சியினர், போலீசார் உதவி செய்து வருகின்றனர். பாலாஜி தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் சேர்ந்து வாழ வேண்டும் கட்டாயப்படுத்துகிறாரே தவிர நானோ, எனது மகளோ அவருக்கு முக்கியம் அல்ல.

நான் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஒன்றும் செய்யாத என்னை போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். நான் வீடியோ வெளியிடக்கூடாது, பத்திரிகையாளர்களை சந்திக்கக் கூடாது என என்னை மிரட்டுகிறார்கள். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி தெரியவில்லை. அடிக்கடி தற்கொலை எண்ணமும் வருகிறது. இதனால் நான் பயத்துடனேயே வாழ்ந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in