'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சமந்தா திருமணம் ஆன ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த வாரம்தான் சமந்தாவிற்கும், நாகசைதன்யாவிற்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களிலேயே அவர் நடித்து நேற்று வெளிவந்த 'ராஜு காரி கதி 2' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இன்று முதல் அவர் நடிக்கும் 'மகாநதி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராகும் நடிகை சாவித்ரியின் சொந்த வாழ்க்கை கதைதான் 'மகாநதி'. இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் அவர் நடித்து வரும் படங்களிலும் அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளாராம். திருமணம் முடிந்ததுமே பல நடிகைகள் மீண்டும் நடிக்க வர மாட்டார்கள். ஆனால், சமந்தாவின் புகுந்த வீடே கலைக் குடும்பம் என்பதால் அனைவருமே அவர் தொடர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
சமந்தா தமிழில் தற்போது, “இரும்புத் திரை, சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் படம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'மெர்சல்' வரும 18ம் தேதி வெளியாகிறது.