600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு நாகார்ஜுனாவின் மருமகள் ஆனார் நடிகை சமந்தா. மருமகள் சமந்தாவும், மாமனார் நாகார்ஜுனாவும் நடித்துள்ள 'ராஜு காரி கதி 2' படம் இன்று தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தில் சமந்தா பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்வு ஒன்றில் பேசிய நாகார்ஜுனா, தான் சமந்தாவின் ரசிகன் என்று சொல்லி சமந்தாவை வெட்கப்பட வைத்துள்ளார்.
“சமந்தா முதலில் நடித்த 'ஏ மாய சேசவே' படத்தைப் பார்த்ததில் இருந்தே நான் சமந்தாவின் ரசிகன் ஆகிவிட்டேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் அவருக்கு போன் செய்து அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன் எனத் தெரிவித்தேன். இந்த 'ராஜு காரி கதி2' படத்தில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவருடைய நடிப்பு மிகவும் அர்த்தமானதாக இருக்கும். படத்தில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் சமந்தாவின் நடிப்பு மிகச் சிறந்த நடிப்பு என்று சொல்ல மாட்டேன். அவர் இதை விட இன்னும் சிறப்பான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ஆனால், சமந்தா இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்தப் படத்தில் நடித்த அம்ருதா கதாபாத்திரம்தான் மிகச் சிறந்தது,” என நாகார்ஜுனா பாராட்டினார்.