ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நாகர்ஜூனா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'ராஜூ கரி கதி-2'. இந்தப்படத்தை இயக்குனர் ஒம்கர் இயக்கியுள்ளார். இது அவர் 2015ல் தெலுங்கு இயக்கிய 'ராஜூ கரி கதி' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது. இதில் நாகார்ஜுனாவுடன் அவரது மருமகள் சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாரர் படம் என்றாலும் காமெடி முலாம் பூசப்பட்டு உருவாகியுள்ளது இந்தப்படம்..
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை கடந்த வருடம் மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'பிரேதம்' என்கிற படத்தில் இருந்து எடுத்துள்ளார் இயக்குனர் ஒம்கர். பிரேதம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை வாங்கி, ஆனால் அப்படியே அப்பட்டமாக காப்பி பண்ணாமல் அதில் உள்ள முக்கியமான 3௦ சதவீத கதையை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய டீமை வைத்து புதிதாகவே திரைக்கதை எழுதியுள்ளாராம் ஒம்கர். அதனால் இந்தப்படத்தை 'பிரேதம்' படத்தின் ரீமேக் என்பதைவிட அதன் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்கிறார் டைரக்டர் ஒம்கர்.