திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
வட இந்திய நடிகையான ரகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். இதுவரை வட இந்தியாவில் இருந்தபடியே படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத், சென்னை என வந்து சென்று கொண்டிருந்த அவர், விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து குடியேறவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கானாவின் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற பெண்களுக்கான அமைப்பில் தூதராகியிருக்கிறார் அவர்.
அதாவது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற அமைப்பை பல மாநிலங்களில் உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் உருவாக்கியுள்ள அந்த அமைப்பின் தூதராக தற்போது ரகுல் பிரீத் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெரிவித்துள்ள அவர், இந்த பொறுப்பை எனக்கு கிடைத்த மரியாதையாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.