ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வட இந்திய நடிகையான ரகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். இதுவரை வட இந்தியாவில் இருந்தபடியே படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத், சென்னை என வந்து சென்று கொண்டிருந்த அவர், விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து குடியேறவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கானாவின் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற பெண்களுக்கான அமைப்பில் தூதராகியிருக்கிறார் அவர்.
அதாவது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற அமைப்பை பல மாநிலங்களில் உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் உருவாக்கியுள்ள அந்த அமைப்பின் தூதராக தற்போது ரகுல் பிரீத் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெரிவித்துள்ள அவர், இந்த பொறுப்பை எனக்கு கிடைத்த மரியாதையாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.