மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கேளிக்கை வரி தொடர்பாக தமிழ் திரையுலகினர் அரசுடன் மூன்றாவது நாளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டத்தின் முடிவில் 2 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்க அரசு சம்மதம் தெரிவித்தது. திரையுலகினரும் அதை ஏற்று கொண்டனர். இனி அரசு நிர்ணயித்த தியேட்டர் கட்டணத்துடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன் உள்ளிட்ட தியேட்டர் உரிமையாளர்கள்...
இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே சினிமா டிக்கெட் விற்கப்படும். எப்படிப்பட்ட பெரிய நடிகரின் படம் என்றாலும் ஒரு ரூபாய் கூட அதிகம் வசூலிக்கப்படாது. அதேப்போன்று தின்பண்டங்ளும் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும். பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் நாளை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுப்போம். தியேட்டர்களில் அம்மா குடிநீர் விற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்கள். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்களின் சம்பளத்தையும், தயாரிப்பு செலவையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.