மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! |
கேளிக்கை வரி தொடர்பாக தமிழ் திரையுலகினர் அரசுடன் மூன்றாவது நாளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டத்தின் முடிவில் 2 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்க அரசு சம்மதம் தெரிவித்தது. திரையுலகினரும் அதை ஏற்று கொண்டனர். இனி அரசு நிர்ணயித்த தியேட்டர் கட்டணத்துடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன் உள்ளிட்ட தியேட்டர் உரிமையாளர்கள்...
இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே சினிமா டிக்கெட் விற்கப்படும். எப்படிப்பட்ட பெரிய நடிகரின் படம் என்றாலும் ஒரு ரூபாய் கூட அதிகம் வசூலிக்கப்படாது. அதேப்போன்று தின்பண்டங்ளும் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும். பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் நாளை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுப்போம். தியேட்டர்களில் அம்மா குடிநீர் விற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்கள். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்களின் சம்பளத்தையும், தயாரிப்பு செலவையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.