'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் அடிதடியில் இறங்கிய வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகரான சந்தானம், சண்முகசுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அவரையும், அவருக்கு ஆதரவாக இருந்த வக்கிலும், பா.ஜ., பிரமுகருமான பிரேம் ஆனந்த் என்பவரையும் தாக்கி உள்ளார். இதில் பிரேம் ஆனந்த் முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார், சந்தானத்தை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனிடையே தான் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன் ஜாமின் கோரி சந்தானம் சென்னை, ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தானத்திற்கு நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் வழங்கினார். அதன்படி சந்தானம் இரண்டு வாரங்களுக்கு சென்னை, வளசரவாக்கம் போலீஸில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டிருக்கிறார்.