டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் அடிதடியில் இறங்கிய வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகரான சந்தானம், சண்முகசுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அவரையும், அவருக்கு ஆதரவாக இருந்த வக்கிலும், பா.ஜ., பிரமுகருமான பிரேம் ஆனந்த் என்பவரையும் தாக்கி உள்ளார். இதில் பிரேம் ஆனந்த் முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார், சந்தானத்தை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனிடையே தான் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன் ஜாமின் கோரி சந்தானம் சென்னை, ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தானத்திற்கு நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் வழங்கினார். அதன்படி சந்தானம் இரண்டு வாரங்களுக்கு சென்னை, வளசரவாக்கம் போலீஸில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டிருக்கிறார்.