தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் மீதான கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இரண்டு வாரங்களாக படங்கள் எதுவும் வெளியாகமல் இருந்தன.
கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக சில தினங்களாக அரசுடன் தமிழ்த் திரையுலகச் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அதில் 2 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 28 சதவீதம் ஜிஎஸ்டியும், 8 சதவீதம் கேளிக்கை வரியும் வசூலிக்கப்படும்.
அரசுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், அரசு விதித்த டிக்கெட் கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட தியேட்டர் உரிமையாளர்கள் விற்க கூடாது. தின்பண்டங்களின் விலையில் எம்ஆர்பியில் என்ன விலை போடப்பட்டுள்ளதோ அந்த விலைக்கே விற்க வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கை வரியை 2 சதவீதம் குறைத்த தமிழக அரசுக்கு நன்றி என்றார்.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் அதிகபட்சமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இனி ரூ.190 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும், ஆன்லைன் என்றால் மேலும் ரூ.30 அதிகரிக்கும். மற்ற ஊர்கள் மற்றும் தியேட்டர்களுக்கு ஏற்ப இந்த கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.