ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் மூலம் ஆஸ்கர் விருது பெற்றவர் ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி. ஆஸ்கர் விருது பெற்ற பிறகு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலப் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் சவுண்ட் டிசைனரும் ரசூல் பூக்குட்டிதான்.
முதன் முதலாக ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டவிருக்கிறார் இவர். இந்த படம் உலக அளவில் பிரசித்தி பெற்ற கேரளா, திருச்சூர் பூரம் திருவிழா பின்னணியில் உருவாகிறது. கடந்த அண்டு நடந்த இந்த பூரம் திருவிழா நிகழ்ச்சிகளை 20-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மற்றும் ஏராளமான மைக்ரோஃபோன்ஸ் மூலம் துல்லியமாக தனது குழுவினருடன் பதிவு செய்துள்ளார் ரசூல் பூக்குட்டி!
ஆண்டுதோறும் நடக்கும் இந்த பூரம் திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்! 300-க்கும் மேற்பட்டவர்களின் செண்டை மேளம், அலங்கரிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட யானைகளின் அணிவகுப்பு, விடியற்காலையில் தொடர்ந்து பல மணிநேரம், நடைபெறும் வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த பூரம் திருவிழா நிகழ்ச்சிகள் எல்லா மக்களும் கண்டு மகிழ் வேண்டும் என்ற நோக்கத்தில் 'ஒரு கதை சொல்லட்டுமா' என்ற படத்தை பிரசாந்த் பிரபாகர் இயக்குகிறார்.
மலையாளத்தில் எடுக்கப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. இதுவரை திரைக்கு பின்னால் இருந்து பணியாற்றி வந்த ரசூல் பூக்குட்டி இந்த படத்தின் மூலம்தான் நடிகராகவும் அறிமுகமாகிறார்.