‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மெர்சல் படத்தின் தலைப்பு தொடர்பாக மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக விஜய்யை வைத்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்து உள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படம் வருகிற தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்தின் தலைப்பு என்னுடையது, நான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன், ஆகையால் இப்படத்தின் தலைப்பை விஜய் படக்குழு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு தலைப்பும் வெவ்வேறானவை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.