மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
மெர்சல் படத்தின் தலைப்பு தொடர்பாக மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக விஜய்யை வைத்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்து உள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படம் வருகிற தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்தின் தலைப்பு என்னுடையது, நான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன், ஆகையால் இப்படத்தின் தலைப்பை விஜய் படக்குழு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு தலைப்பும் வெவ்வேறானவை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.