ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெர்சல் படத்தின் தலைப்பு தொடர்பாக மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக விஜய்யை வைத்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்து உள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படம் வருகிற தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்தின் தலைப்பு என்னுடையது, நான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன், ஆகையால் இப்படத்தின் தலைப்பை விஜய் படக்குழு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு தலைப்பும் வெவ்வேறானவை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.