டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தியேட்டர்காரர்கள் கேளிக்கை வரி உயர்விற்கும், டிக்கெட் கட்டண உயர்விற்கும் ஆதரவளிக்கிறார்களாம். அதே சமயம், தயாரிப்பாளர் சங்கத்தினர் கேளிக்கை வரி உயர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தியேட்டர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசிடம் பேசும் போது, தமிழக அரசின் முடிவுகள் அனைத்திற்கும் கட்டுப்படுகிறோம் என்கிறார்களாம். மேலும் விஷால் தலைமையில் செயல்படும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவர்களது ஆதரவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் புதிய விதிமுறைகள் என சிலவற்றை அறிவித்துள்ளனர்.
1. இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது:
2. அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்
3. கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்
4. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்
5. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்
6. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது
7. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்
மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இன்று அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் தியேட்டர்காரர்களின் கொள்ளைகளை எதிர்க்கும் அறிவிப்புகளாகும்.
தியேட்டர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையே எழுந்துள்ள இந்த மோதலால் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.