டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இன்று(அக்., 13) காலை ஒரு முக்கியமான செய்தி குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் திரையரங்க உரிமையாளர்களுக்கு 6 கட்டளைகள் போட்டிருக்கிறார் அது வருமாறு:
1.அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
2. தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்களை, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையில்தான் விற்கப்பட வேண்டும்.
3. கேன்டீன்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கப்பட வேண்டும் (விலை 10 ரூபாய்).
4. வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்
5. பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.
6. ஆன்லைன் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் பற்றி பொதுமக்கள் அறிந்தால் உடனே புகார் அளிக்கலாம். மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.
இது நாளை முதல் அமுலுக்கு வருகிறது. எத்தனை தியேட்டர்கள், குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் எந்த அளவிற்கு இதை பின்பற்றும் என்பது போகப்போகத்தான் தெரியும்.