‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இன்று(அக்., 13) காலை ஒரு முக்கியமான செய்தி குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் திரையரங்க உரிமையாளர்களுக்கு 6 கட்டளைகள் போட்டிருக்கிறார் அது வருமாறு:
1.அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
2. தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்களை, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையில்தான் விற்கப்பட வேண்டும்.
3. கேன்டீன்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கப்பட வேண்டும் (விலை 10 ரூபாய்).
4. வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்
5. பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.
6. ஆன்லைன் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் பற்றி பொதுமக்கள் அறிந்தால் உடனே புகார் அளிக்கலாம். மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.
இது நாளை முதல் அமுலுக்கு வருகிறது. எத்தனை தியேட்டர்கள், குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் எந்த அளவிற்கு இதை பின்பற்றும் என்பது போகப்போகத்தான் தெரியும்.