ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் மீதான கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து அதை பின்பற்றியும் வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அரசுடன் தமிழ்த் திரையுலகச் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.
அரசு முதலில் 2 சதவீதம் மட்டுமே குறைக்க ஒப்புக் கொண்டதாகவும், அனைவரும் கேட்டுக் கொண்டதால் 5 சதவீதம் வரை குறைத்து இனி கேளிக்கை வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்றும் முடிவெடுத்துள்ளதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.
அதோடு உயர்த்தப்பட்ட தியேட்டர் கட்டணங்களையும் முறைப்படுத்தவும் அரசு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அளவிற்கு இல்லை என்றாலும், அவர்களுக்கு நெருக்கமாக அமையும் விதத்தில் தனி தியேட்டர்களுக்கான கட்டணங்கள் அமையும் என்கிறார்கள்.
டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தால் மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவது மேலும் குறையும் என்று பலரும் கருதும் நிலையில், தனி தியேட்டர்காரர்கள் கட்டணங்களை உயர்த்துவதில் விடாப்பிடியாக இருப்பது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.