கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் அறிமுகமான மேக்னா ராஜ், கன்னடத்துக்காரர் என்றாலும் அவரை வளர்த்துவிட்டது எல்லாம் மலையாள சினிமா தான். சில வருடங்களில் தமிழ், மலையாளம் இரண்டும் தன்னை கைவிட்டுவிட்ட நிலையில் தனது சொந்த ஊரான கன்னட திரையுலகில் தஞ்சம் புகுந்தார்.
அப்படியே கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவுடன் 'ஆட்டகரா' என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் துளிர்விட்டது. இதுபற்றிய செய்திகள் வெளியானாலும் இருவரும் அதை வழக்கம்போல மறுக்கவே செய்தார்கள்..
இந்த நிலையில் இவர்களது காதல் இப்போது திருமணத்தில் முடிவதற்கான காலம் கனிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. வரும் அக்-22ஆம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறதாம். அதை தொடர்ந்து டிசம்பரில் திருமணம் நடைபெற உள்ளதாம்.
இதுவரை தங்களது காதலை பகிரங்கப்படுத்தாத சிரஞ்சீவி சார்ஜா, தனது பிறந்தநாளான வரும் அக்-17ல் காதலையும் திருமண நிச்சயதார்த்த விஷயத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது மேகனா ராஜ் மலையாளத்தில் மூன்று, கன்னடத்தில் ஒன்று என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.