தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து சினிமாவில் உள்ள நடிகைகள் திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நல பாதுகாப்பு அமைப்பை துவங்கினார்கள். இதன்மூலம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.
இருந்தாலும் இதில் ஆக்டிவாக செயல்படுபவர்கள் என்றால் நடிகைகள் ரம்யா நம்பீசனும், ரீமா கல்லிங்கலும் தான். தற்போது இந்த அமைப்பின் புதிய திட்டமாக மலையாள நடிகர் சங்க நிர்வாக குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிற கோரிக்கையை உயர்த்தி பிடித்துள்ளார் ரம்யா நம்பீசன். இதுபற்றி மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ரம்யா நம்பீசன்..
இதுகுறித்து ரம்யா கூறும்போது, “ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ள நடிகர் சங்க நிர்வாக குழுவில், இனி பாதிக்குப்பாதி பெண்கள் இருந்தால் தான் எங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். இதுகுறித்து, வருகின்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும்.
திலீப்பின் 'ராம்லீலா' படத்தை தடுக்காதீர்கள் என மஞ்சு வாரியார் சொன்னது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்கியது சிலர் சொல்வது போல மம்முட்டி, பிருத்விராஜை சந்தோஷப்படுத்த எடுத்த தனிப்பட்ட முடிவு ஒன்று அல்ல. அது அவர்கள் பார்வையாக இருக்கலாம்.. ஆனால் பொறுப்பில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானம் அது. ஒருவேளை திலீப் குற்றமற்றவர் என நிரூபணமானால், அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அந்த தீர்மானத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்” என கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.