வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி படித்துறையில் பாடல் காட்சிகள் படமாக்க முயன்றபோது புரோகிதர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
திருவையாறு காவிரி படித்துறையில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகள் நடக்கும். தினம்தோறும் சுமார் 50 புரோகிதர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். நேற்று தானா சேர்ந்த கூட்டம் படத்தின் குழுவினர் காவிரி படித்துறைக்கு வந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்கான அனுமதி பெற்றிருக்கிறோம். நீங்கள் எழுந்து செல்லுங்கள் என்று புரோகிதர்களை விரட்டி உள்ளனர். இதையடுத்து புரோகிதர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
"காவிரி படித்துறை புனிதமானது, இங்கு சடங்குகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். படப்பிடிப்புக்கு அனுமதிக்க முடியாது மீறினால் நாங்கள் மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று கூறியிருக்கிறார்கள். இதனால் போலீசார் படப்பிடிப்பு குழுவினரிடம் "நீங்கள் அனுமதி பெற்றிருந்தாலும் இப்போது படப்பிடிப்பு நடத்த முடியாது. சடங்குகள் நடக்காத நாளில் வாருங்கள்" என்று கூறி படப்பிடிப்பு குழுவினரை திருப்பி அனுப்பினார்கள்.