டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வாரம் துல்கர் சல்மானின் இருமொழிப்படமான 'சோலோ' மலையாளத்தில் மட்டும் வெளியானது. ஆனால் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் திருப்தியாக இல்லை என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அனுமதி பெறாமலேயே க்ளைமாக்ஸை ரீ எடிட் செய்து வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு.
இதற்கு இயக்குனர் பிஜாய் நம்பியாரும், நாயகன் துல்கர் சல்மானும் தங்களது வருத்தம் கலந்த கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தை ஏன் ரீ எடிட் செய்தோம் என படத்தின் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, 'படத்தின் வேலைகள் முடிந்தபின் படத்தை போட்டு பார்த்தபோது, இது ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்காது என தெரியவந்தது. நானும் ஒரு ரசிகனாக இந்தப்படத்தை பார்த்தபோது, நான்காம் பகுதி, அதாவது ருத்ராவின் உலகம் எபிசோடில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் ஏற்கும் விதமாக இல்லை. அதனால் இயக்குனரிடம் அதன் க்ளைமாக்ஸை கொஞ்சம் மாற்றுங்கள் என கூறினேன்..
அதுமட்டுமல்ல, இந்த நான்கு படங்களின் வரிசையை கொஞ்சம் மாற்றி, திரிலோக்கின் உலகம் எபிசோடை கடைசியாக வைக்கும்படியும் சொன்னேன்.. காரணம் அந்த பகுதிதான் ஒரு க்ளைமாக்ஸ்க்கு உண்டான நிறைவுடன் இருந்தது. ஆனால் இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் இயக்குனர் பிஜாய் நம்பியார். எதிர்பார்த்த மாதிரியே படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களே நிறைய வர ஆரம்பித்தன. வேறுவழியில்லாத நிலையில் தான் 'சோலோ' படத்தை ரீ எடிட் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ.