ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழக அரசு கடந்த வாரம் தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வை அறிவித்தது. அதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 160 ரூபாய் வரை டிக்கெட் கட்டணங்களை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. 90 சதவீதம் வரை தனி தியேட்டர்களும், இரு தியேட்டர்களும் உள்ளன. இவற்றிற்கான கட்டண உயர்வு போதாது என்று தனி தியேட்டர்களை வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கேளிக்கை வரி ரத்து, டிக்கெட் கட்டண உயர்வை முறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யவும் முயன்று வருகிறார்கள். ஆனால், இதற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாகத் தகவல். தங்களுக்குக் கிடைத்துள்ள டிக்கெட் கட்டண உயர்வு சரியாக இருப்பதாகவும், நாங்கள் ஏன் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்களாம்.
தனி தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வு மாற்றியமைக்கப்படாத பட்சத்தில் அதன் உரிமையாளர்கள் தீபாவளிக்கு முன்னதாகவே வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி வருகிறார்களாம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்களில் சிறிய படங்களுக்கு தியேட்டர்களைத் தருவதில் கெடுபிடி செய்வதால் சிறிய தயாரிப்பாளர்களும் மல்டிபிளக்ஸ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து நடக்கும் பேச்சு வார்த்தையில் இதனால் இழுபறி நிலைமையே நீடிக்கிறதாம்.